ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் மர்ஹி என்கிற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.